Posts

Showing posts from April, 2021

ஏமாற்றம் நிறைந்த உலகில் பாதுகாப்பாகவும், இறை அனுகிரகத்தோடும் நம்மை வழிநடத்தி செல்வது

 இந்த கட்டுரையை சார்ந்து உங்களுடைய மனம் திறந்த கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுடைய கருத்துக்களை சார்ந்து இதுபோன்ற செய்திகளை ( ஆன்மீக அன்பர்கள் மன்னிக்கவும்) பதிவேற்றம் செய்தல் உங்களுடைய நேரத்தை வீணடிக்குமா? என்பதை அறிந்து கொள்ள எனக்கு உதவுங்கள்.     இறை அனுகிரகம் பெற்ற மகான்களுக்கு தினமும் அதிகாலை மனதால் தலை குனிந்து உங்கள் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.  ஏனென்றால் ஏமாற்றம் நிறைந்த உலகில்  பாதுகாப்பாகவும்,  இறை அனுகிரகத்தோடும் நம்மை வழிநடத்தி செல்வது மாகான்கள் ஆகிய சித்தர்கள் மட்டுமே.  அவதார மனிதர்களுக்கு உங்களுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தினந்தோறும் தலை குனிந்து தெரிவியுங்கள்.  இந்த வழிமுறைகளை கடைபிடித்தீர்கள் என்றால்!... இறை அனுகிரகம்  உங்களையும், உங்கள்  வருங்கால சந்ததியினரையும் பாவ கணக்கிலிருந்து விடுவித்து, புண்ணிய பாதையில் பயணிக்க வைத்து,  உங்களின் அடுத்த தலைமுறையில் பிறக்கக்கூடிய குழந்தைகளின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் என்பதே இல்லாமல் செய்துவிடும் என்பதே கண்கண்ட உண்மை.   என்றும் ஜோதிட இறைபணியில் ...

"கூகுள்" நண்பேண்டா!?....

 "கூகுள்" நண்பேண்டா!?.... எட்டு வருடங்களுக்கு முன்பு எங்காவது! எந்த ஊரிலாவது!! ஜாதக ஆலோசனை பெற எனக்கு அழைப்பு விட மாட்டார்களா?  என்று நான் எண்ணிய பொழுது!!...  கொடைக்கானல் மலை ஏறி பின்பு சுமார் 16 கிலோமீட்டர் மலை உட்பகுதியில் இறங்கினால் , அழகிய மலை கிராமம். அங்கிருந்து ஜாதக ஆலோசனை பெற எனக்கு அழைப்பு வரும். நான் செல்லும் பாதை மிக கடினமாக இருந்தாலும்....  நம்மை பின் தொடர.... யாருமில்லை?  என்ற எண்ணம் என்னுள் தலைக்கேறி.....? சுதந்திர மனப்பான்மையுடன் மலை பாதையில்  என்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் தருணம்......! "குகூள்" என்னை அறியாமல் ( தவறு) என் 'நண்பனாக' என்னை பின் தொடர....!  அனுமதித்த  நொடிபொழுது!! நான் பாதுகாப்புடன் பயணம் செய்கிறேன்....?  என்ற உணர்வு எனக்குள் உண்டானது. நான் எங்கிருந்தாலும் 'நடைபயணம்' மேற்கொண்டேனா? என்பதை "குகூள்" கவனிக்க தொடங்கியது. ஜோதிடம் சார்ந்து என்னுடைய பயணம் எவ்வாறு இருக்க வேண்டும்?  என்று "குகூள்" எனக்கு ஆலோசனை கூற தொடங்கியது. முக்கியமாக 'தண்ணீர்' அருந்துவதின் நன்மை பற்றி எடுத்துரைத்தது.  எ...

செய்வினை தோஷத்தால் உங்கள் குடும்பம் பாதிக்கபடுகிறதா? எவ்வாறு கண்டறியலாம்?

 செய்வினை தோஷத்தால் உங்கள் குடும்பம் பாதிக்கபடுகிறதா?  எவ்வாறு கண்டறியலாம்? ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட..... meenaksheJothidalayam2010.blogspot.com meenakshe-Jothidalayam.business.site meenakshe Jothidalayam /YouTube  உங்களுடைய ஜாதகத்தில் அட்டமத்தில் கேது அமர்ந்து பாவ கிரக சேர்க்கை பெற்றாலோ, அல்லது பாவ கிரக பார்வையில் கேது அட்டமத்தில் அமர்ந்தாலோ, ( ராகு பார்வையை தவிர்த்து மற்ற பாவ கிரக பார்வை கேதுவின் மீது பதிவதை  பற்றியும்  குறிப்பிட்டுள்ளேன் ) முக்கியமாக கேதுவுடன் மாந்தி சேர்க்கை இருந்தால் கேது தசையோ, அல்லது கேது பார்வையில் அமர்ந்த கிரகத்தினுடைய தசை நடப்பில் வந்தால் நிச்சயம் செய்வினை கோளாறால் அந்த குடும்பம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அதுவரையிலும் ஜாதகத்தை நம்பாதவர்கள் கூட இந்த மாதிரி தசா, புக்தி அவர்கள் ஜாதகத்தில் நடைமுறைக்கு வரும்பொழுது ஜாதகம், அதை சார்ந்த விசயங்களை நம்ப ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் ஜாதகரை சுற்றி நடக்கும் நிகழ்வு ஜாதகரை படுத்தி எடுத்து விடும். இதற்கான பரிகாரம் என்ன? என்பதை பற்றி இனி வரும் நாட்களில் விரிவாக பேசலாம். ...

கருடாழ்வாரின் பெருமைகள் பற்றி மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்......

 கருடாழ்வாரின் பெருமைகள் பற்றி மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்...... ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின் தொடர..... meenaksheJothidalayam.blogspot.com meenakshe-Jothidalayam.business.site meenakshe Jothidalayam /YouTube  ஆடி மாதம்,சுக்ல பட்சமும், பஞ்சமி திதியும், சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அவதரித்தவர் தான் கருடாழ்வார்.   ஆண்டாளின் வளர்ப்பு தந்தையான பெரியாழ்வார் கருடனின் மறு அவதாரமாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.  ஆழ்வார்கள் தம் பாடலில் இவரை கொற்றப்புள், தெய்வப்புள், காய்ச்சினபுள் என்று அழைக்கின்றனர்.  ஆண்டாள் அன்பு மிகுதியால் கருடாழ்வாரை புல்அரையன் என்று அழைக்கின்றார்.   பதினெண் புராணங்களில் கருடபுராணமும் கருட பெருமைக்கு ஒரு சான்று.  நீத்தார் பெருமையும், அவர்களுக்குரிய கடன்கள் பற்றியும், உயிர், ஆத்மா இவற்றின் பயன்கள் பற்றியும் இந்த புராணம் விரிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது.  திருமலையில் உள்ள சப்தகிரி மலைகளில் ஒன்றுக்கு கருடாத்ரி என்ற பெயரும் உண்டு.  மகாபாரத இறுதிப் போரில் பாண்டவர்கள் கருட ...

புதன் அலியாக மாறியதின் காரணம்?

 புதன் அலியாக மாறியதின் காரணம்? ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை# பின்தொடர..... meenaksheJothidalayam 2010.blogspot.com meenakshe-Jothidalayam.business.site meenakshe Jothidalayam / YouTube  நவகிரகங்களில் புதன்.  சந்திரனுக்கும், தாரா தேவிக்கும் புத்திரனாக பிறந்தவர் தான் இந்த கதையின் நாயகன் புதன்.  ரோகினியின் அன்பால் வளர்க்கப்பட்ட புதன் வாலிப வயதை அடைந்ததும் தன்னுடைய தந்தை சந்திரனும், குருவின் மனைவி தாராதேவியும் செய்த தவறினால் தன்னுடைய பிறப்பு நிகழ்ந்ததை நினைத்து மனம் வெறுத்து இமயமலை சாரல் சென்று தன்னிச்சையாகவே தவம் செய்ய தொடங்கினார். எம்பெருமான் நாராயணன் காலை பற்றிய புதன் கடும் தவமிருந்து ஸ்ரீமான் நாராயணனின் அனுகிரகத்தால் குருபகவானின் உதவியே இல்லாமல் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். சிறப்பாக சென்று கொண்டிருந்த நம் நாயகர் புதன் வாழ்க்கையில் பெண்களே கண்டு பொறாமை படும் அளவிற்கு அழகின் பிம்பமாய் தோன்றிய தேவலோக மாது புதனுடைய அழகில் மயங்கி தனக்கு இகலோக இன்பத்தை தர வேண்டினார். விழித்துக்கொண்ட புதன் தன்னை போல் இனி ஒரு குழந்தை பிறக்கக்கூடாது என்று எண்ணி தே...

மாந்தரீகம் மேலும் துஷ்ட தேவதைகள் வசப்பட....

 மாந்தரீகம் மேலும் துஷ்ட தேவதைகள் வசப்பட.... ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின்தொடர..... meenaksheJothidalayam 2010.blogspot.com meenakshe-Jothidalayam.business.site meenakshe Jothidalayam /YouTube  மாந்திரீக தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களும், மாந்தரீக சக்தி உங்கள் வசப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் சுய ஜாதகத்தில் கேது உங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். புரியும்படி சொல்கிறேன். அதாவது செவ்வாயின் பார்வையில்  விருச்சிகத்தில் கேது அமந்தால் மாந்தரீகம் உங்களுக்கு வசப்படும். அதே போல் உங்கள் ஜாதகத்தில் கேது, சனி சேர்க்கை அல்லது சனி பார்வையில் கேது அமர்ந்தால் நிச்சயம் துஷ்ட தேவதைகள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படும்.  நீங்கள் விரும்பியதை ஏதேனும் ஒரு ருபத்தில் உங்களிடம் துஷ்ட தேவதைகள் கொண்டு வந்து சேர்க்க வாய்ப்புண்டு. என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன். தொடர்புக்கு - 9500922576

மறுபிறவி என்பது உங்களுக்கு உண்டா?

 மறுபிறவி என்பது உங்களுக்கு உண்டா? ஜாதகத்தின் அடிப்படையில் பார்த்தோமே என்றால் லக்னம் அல்லது ராசிக்கு 12ம் வீட்டில் குரு பார்வையில்  கேது உச்சமாகி அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு மறு பிறவி என்பது கிடையாது. அதாவது இந்த ஜென்மத்திலேயே ஜாதகர் தனக்கான கரும வினை பலன்களை முழுவதுமாக அனுபவித்து தன்னை ஒரு ஞானியாக உணர்ந்த பின்பு இறை நிழலை சென்றடைவார்.  மோட்சத்தின் கதவுகள் இந்த அமைப்பில் பிறந்த ஜாதகருக்கு வழி விட்டு திறக்கும். ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின்தொடர..... meenaksheJothidalayam2010.blogspot.com meenakshe- jothidalayam.business. site meenakshe Jothidalayam /YouTube  என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர் மீனாக்ஷி ஜோதிடாலயம் 'தனுசு' பா.பிரபாகரன். தொடர்புக்கு - 9500922576