புதன் அலியாக மாறியதின் காரணம்?
புதன் அலியாக மாறியதின் காரணம்?
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை# பின்தொடர.....
meenaksheJothidalayam 2010.blogspot.com
meenakshe-Jothidalayam.business.site
meenakshe Jothidalayam / YouTube
நவகிரகங்களில் புதன்.
சந்திரனுக்கும், தாரா தேவிக்கும் புத்திரனாக பிறந்தவர் தான் இந்த கதையின் நாயகன் புதன்.
ரோகினியின் அன்பால் வளர்க்கப்பட்ட புதன்
வாலிப வயதை அடைந்ததும் தன்னுடைய தந்தை சந்திரனும், குருவின் மனைவி தாராதேவியும் செய்த தவறினால் தன்னுடைய பிறப்பு நிகழ்ந்ததை நினைத்து மனம் வெறுத்து இமயமலை சாரல் சென்று தன்னிச்சையாகவே தவம் செய்ய தொடங்கினார்.
எம்பெருமான் நாராயணன் காலை பற்றிய புதன் கடும் தவமிருந்து ஸ்ரீமான் நாராயணனின் அனுகிரகத்தால் குருபகவானின் உதவியே இல்லாமல் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.
சிறப்பாக சென்று கொண்டிருந்த நம் நாயகர் புதன் வாழ்க்கையில் பெண்களே கண்டு பொறாமை படும் அளவிற்கு அழகின் பிம்பமாய் தோன்றிய தேவலோக மாது புதனுடைய அழகில் மயங்கி தனக்கு இகலோக இன்பத்தை தர வேண்டினார்.
விழித்துக்கொண்ட புதன் தன்னை போல் இனி ஒரு குழந்தை பிறக்கக்கூடாது என்று எண்ணி தேவலோக மாதுவின் கோரிக்கையை நிராகரித்தார். கடும் கோபமுற்ற அந்த தேவலோக பெண் புதனை அலியாக மாற சபித்து விட்டார்.
மனம் நொந்த புதன் நாராயணன் காலடியை பற்ற தன்னுடைய மறு உருவமான புதனுக்கு தன்னால் சாப நிவர்த்தி அளிக்க முடியாது என்று கூறி புதனை சிவபெருமானிடம் சரணாகதி அடைய பரிந்துரை செய்தார்.
எம்பெருமான் நாராயணனின் உத்தரவுக்கிணங்க
புதன் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம் திருவெண்காடு.
என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர்
'தனுசு' பா.பிரபாகரன்.
தொடர்புக்கு - 9500922576
Comments
Post a Comment