"கூகுள்" நண்பேண்டா!?....
"கூகுள்" நண்பேண்டா!?....
எட்டு வருடங்களுக்கு முன்பு எங்காவது! எந்த ஊரிலாவது!! ஜாதக ஆலோசனை பெற எனக்கு அழைப்பு விட மாட்டார்களா?
என்று நான் எண்ணிய பொழுது!!...
கொடைக்கானல் மலை ஏறி பின்பு சுமார் 16 கிலோமீட்டர் மலை உட்பகுதியில் இறங்கினால் , அழகிய மலை கிராமம்.
அங்கிருந்து ஜாதக ஆலோசனை பெற எனக்கு அழைப்பு வரும்.
நான் செல்லும் பாதை மிக கடினமாக இருந்தாலும்....
நம்மை பின் தொடர.... யாருமில்லை?
என்ற எண்ணம் என்னுள் தலைக்கேறி.....?
சுதந்திர மனப்பான்மையுடன் மலை பாதையில் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் தருணம்......!
"குகூள்"
என்னை அறியாமல் ( தவறு)
என் 'நண்பனாக' என்னை பின் தொடர....!
அனுமதித்த
நொடிபொழுது!!
நான் பாதுகாப்புடன் பயணம் செய்கிறேன்....?
என்ற உணர்வு எனக்குள் உண்டானது.
நான் எங்கிருந்தாலும் 'நடைபயணம்' மேற்கொண்டேனா? என்பதை "குகூள்" கவனிக்க தொடங்கியது.
ஜோதிடம் சார்ந்து என்னுடைய பயணம் எவ்வாறு இருக்க வேண்டும்?
என்று "குகூள்" எனக்கு ஆலோசனை கூற தொடங்கியது.
முக்கியமாக 'தண்ணீர்' அருந்துவதின் நன்மை பற்றி எடுத்துரைத்தது.
என்னிடம் ஜாதக ஆலோசனை பெற விரும்பும் நண்பர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தின் பலன்கள் பற்றி எடுத்துரைக்கும் பொழுது!
'நீர்' அருந்துவதை நான் மறந்தாலும் எனக்கு நினைவூட்டியது!
என் நண்பன் "குகூள்".
( ஜாதக ஆலோசனை பெறும் நண்பர்களுக்கு நான் சொல்வது எந்தளவு உண்மை என்பது புரியும்?...)
இருந்தாலும்!
நான் சென்ற பயணத்தின் ஒரு பகுதியை என் மனது "மறக்க" நினைத்தாலும், ஞாபக அலைகளாக இன்றும் என்னிடம் சேர்ப்பது "குகூள்" என்ற நண்பன்.
வாழ்க "குகூள்"!
வளர்க "குகூளின்"!! சேவை!!!
என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர் 'தனுசு' பா.பிரபாகரன்.
தொடர்புக்கு : 9500922576.
Comments
Post a Comment