வேலவனும்! வேலும்!! முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலினுடைய தத்துவம் நமக்கு உணர்த்துவது என்ன?
வைகாசி 11ம் தேதி 25.05.2021 செவ்வாய்கிழமை வைகாசி விசாகம்.
முருகப் பெருமானுடைய
அருட்பார்வையால்
உலக மக்கள் அனைவரும் நோய், நொடி இன்றி நீடித்த ஆயுளுடன் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர
மீனாக்ஷி ஜோதிடாலயம் எம்பெருமான் முருகப்பெருமானை மனமாற பிரார்த்தனை செய்கிறது.
வேலவனும்!
வேலும்!!
முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலினுடைய தத்துவம் நமக்கு உணர்த்துவது என்ன?
மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்......
முருகப்பெருமான் மூன்று விதமான சக்திகளை தன்னுள் உள்ளடக்கியுள்ளார் என்பதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.
வேலவனை தரிசனம் செய்யும்பொழுது எம்பெருமானிடம் உள்ள அந்த மூன்று சக்திகளும் நம்மை ஆட்கொள்ளும் என்பதே உண்மை.
நம்மை வழிநடத்தி செல்லக்கூடிய அந்த மூன்று சக்திகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் உயர்நிலைக்கு செல்லவேண்டும் என்று விரும்பினால், தான் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும்,
அந்த தொழில் மீது அளவு கடந்த ஆர்வமும், நேசமும் (காதலும்) இருக்க வேண்டும்.
இதைத்தான் இச்சாசக்தி என்று குறிப்பிடுகிறோம்.
பின்பு அந்த தொழிலை நிலை நிறுத்துவதற்கான சக்தியும், திறமையும், ஊக்கமும் உங்கள் ஆழ் மனதை ஆக்கிரமிக்க வேண்டும்.
இதுதான் கிரியாசக்தி எனப்படுவதாகும்.
மிக முக்கியமாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஆழ்ந்த அறிவு என்பது இந்த கலியுகத்தில் வாழ்வதற்கு அவசியம் தேவையான ஒன்று.
தொழில் சார்ந்த ஆழ்ந்த அறிவு என்பது இருந்தால் மட்டுமே நீங்கள் செய்யும் தொழிலில் நீண்ட காலம் உங்களால் நிலைத்து நிற்க முடியும்.
அதேநேரம் தொழில் சார்ந்த வருமானம் என்பதை திறம்பட கையாண்டு உங்களுடைய அடுத்த தலைமுறையின் சந்ததியினரையும் உங்களால் வாழ வைக்க முடியும்.
ஞான சக்தியின் மறுவடிவமான ஆழ்ந்த அறிவுனுடைய முக்கியத்துவம் பற்றி புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
ஞானத்தின் வடிவான வேலை தரிசனம் செய்யும்பொழுது ஆழ்ந்த அறிவு என்பது உங்களை அறியாமலேயே உங்கள் மனதை ஆட்கொள்ளும். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி இந்த மூன்று சக்திகளையும் தன்னுள் அடக்கியவர் முருகப்பெருமான்.
முருகனின் வலப்புறம் இச்சா சக்தியாக விளங்குவது வள்ளி, முருகனின் இடப்புறம் கிரியா சக்தியாக விளங்குவது தெய்வானை,
ஞானசக்தியாக விளங்குவது முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேல்.
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட.....
meenaksheJothidalayam 2010.blogspot.com
meenakshe-Jothidalayam.businesses.site
meenakshe Jothidalayam /YouTube
ஜோதிட ஆலோசனை/
மீனாக்ஷி ஜோதிடாலயம்/ Facebook
அந்தவேலினுடைய தன்மையை பார்க்கும் பொழுது மேல்பகுதி கூர்மையாக இருக்கும்,
நடுப்பகுதி விசாலமாக இருக்கும், வேலின் அடிப்பகுதி நீளமாக இருக்கும்.
அதாவது வேலின் மேற்பகுதி நமக்கு கூர்மையான அறிவையும்,
வேலின் நடுப்பகுதி விசாலமான மனதையும்,
வேலின் அடிப்பகுதி ஆழ்ந்த அறிவு மேலும் நீண்ட ஆயுளையும் நமக்கு உணர்த்துகிறது.
ஆகையால் முருகப்பெருமான் கையில் இருக்கும் வேலை தரிசனம் செய்பவர்கள் இந்ததத்துவத்தை உணர்ந்து தரிசனம் செய்தால் இந்தமூன்று சக்திகளும் உங்களை ஆட்கொண்டு இந்தஉலகத்தில் வாழ்வதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் வாரி வழங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆகையால்தான் முருக பக்தர்கள் பெரும்பாலும் சுயதொழிலில் ஈடுபட்டு கடல் கடந்து வணிகம் செய்து பெரும் செல்வம் ஈட்டி இன்றைக்கும் செல்வந்தர்களாக வலம் வருகிறார்கள்.
வேலவன் அனுகிரகம் பெற்று உலக மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ மீனாட்சி ஜோதிடாலயம் முருகப்பெருமானை மனமார பிரார்த்னை செய்கின்றது.
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
ஜோதிட ஆலோசனை பெற 9500922576 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
திருச்சிற்றம்பலம்.
Comments
Post a Comment