ஸ்ரீராம நவமி
ஸ்ரீராம நவமி :-
சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதி ஸ்ரீ ராம நவமியாக
நம் முன்னோர்களால் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்த அவதாரங்களில் மிகவும் போற்றத்தக்க அவதாரம் ஸ்ரீராம அவதாரம்.
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின்தொடர....
meenaksheJothidalayam 2010.blogspot.com
meenakshe- Joyhidalayam.business. site
meenakshe Jothidalayam /YouTube
ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம் / Facebook
மூன்று எழுத்துக்கு ஒரு மகத்துவம் உண்டு.
அரசியல் சார்ந்த பெரும்புள்ளிகள் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
சரி மூன்றெழுத்து மந்திரம் :-
ஆன்மா, ஆன்மாவிற்கு வேண்டிய உயிர், உயிரால் தேடக்கூடிய அன்பு,
அன்பால் வரக்கூடிய காதல்,
சமயத்தில் அதுவே கோபமாக மாறக்கூடிய தருணம், அதனுடைய வெளிப்பாடு பக்தி, பின்பு முக்தி.
பகவானுடைய அவதாரத்தில் இவை அனைத்தையும் தன்னுள் அடக்கி ஒரு மனிதனாக வாழ்ந்தவர் ஸ்ரீராமபிரான்.
ஸ்ரீராமனுடைய அவதாரம் மனிதப் பிறவியாக இருந்தாலும்,
உலக வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஸ்ரீராமபிரான்.
முக்கியமாக மனிதனுக்கே உரிய குணத்தை தன்னுடைய ஸ்ரீராம அவதாரத்தில் வெளிபடுத்தினார்.
அண்களுக்கே சொந்தமான சந்தேகம் என்ற உணர்வினை தன் மனைவி சீதா தேவியிடம் வெளிபடுத்தினார்.
கடவுளின் அவதாரமான ஸ்ரீராமனுக்கே சந்தேகமா? நீங்கள் கேட்பது புரிகிறது.
உணர்ந்து கொள்ளுங்கள்.
மனித பிறவி எடுப்பவன்!
இத்தனை குணங்களையும் தன்னுள் உணர்ந்து அதை சமயம் வரும்பொழுது வெளிக்காட்ட தயங்காதவன்!!... என்பதை ஸ்ரீராமபிரான் நமக்கு உணர்த்தியதாக நாம் பொருள் கொள்ளல் வேண்டும்.
மனிதனாக வாழ்ந்து, மனிதனுக்கூறிய குணங்களை பெற்று, மனித பிறவியில் பெறக்கூடிய கருமவினைகள் அனைத்தையும் தலைகுனிந்து ஏற்றுக் கொண்டவர் ஸ்ரீராமபிரான்.
ஸ்ரீராம அவதாரம் நமக்கு உணர்த்துவது மனிதன், மனிதனாக வாழ லேண்டும் என்பதே.
இந்த மனித பிறப்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாராக இருந்தாலும் சகமனிதனாக பார்க்க நாம், நம்முடைய மனதை தயார் செய்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக நம்முடைய கடமைகளை நாம் தான் செய்தாக வேண்டும்! என்ற உயர்ந்த நோக்கத்தை ஸ்ரீராம அவதாரத்தில் நாம் உணரலாம்.
தன்னைத்தானே பெருமையாக பறை சாற்றிக் கொள்ளும் ஆன்மீகவாதிகளும், அரசாள்பவர்களும், யாராக இருந்தலும்! விதியின் முன்பு தலைகுனிந்தாக வேண்டும்!! என்பதை நமக்கு உணர்த்துவது தான்
ஸ்ரீராம அவதாரம்.
மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்!....
என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு உணர்த்தினாலும்,
ஸ்ரீராம
என்ற மந்திரத்திற்கு ஈடு, இணை எதுவும் இல்லை என்பது தான் உண்மை.
ராமா என்று உச்சரிப்பதை விட ஸ்ரீராமா என்று கூற பழகுங்கள்.
இந்த மந்திரத்தை தினந்தோறும் நீங்கள் உச்சரிக்கும் பொழுது உங்களுடைய ஆன்மா உற்ற தோழனாக உங்களுக்கு வழிகாட்டும்.
உங்களுடைய உண்மையான தோழன் உங்கள் ஆன்மா மட்டுமே....
உணர்ந்தவருக்கு இறை நிழல் காந்திருந்து அரவணைக்கும்.
ஸ்ரீராம மந்திரத்தை மனதில் இருத்துங்கள்.
உங்கள் ஆன்மாவிற்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.
ஸ்ரீராமபிரானை பற்றிய கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளேன்.
வாசித்து பார்த்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.
என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment