வில்லன் மாந்தி என்றால் ஹுரோ?

 வில்லன் மாந்தி என்றால் ஹுரோ?


சனி பகவானுக்கு இரண்டு புத்திரர்கள்.

இருவர் மாந்தி. மற்றொருவர் குளிகன்.

சனி பகவான் தன் குடும்ப உறுப்பினர்களுடன் வீற்றிருக்கும் திருக்கோவில் கும்பகோணம் அருகே உள்ளது. ஊர் பெயர் ஞாபகம் இல்லை. விசயம் தெரிந்தவர்கள் கோவிலின் முகவரியை பதிவிடவும்.


சரி! விசயத்திற்கு வருவோம். 

முதலில்

மாந்தியின் பணி என்ன?  என்பதை பற்றி பார்க்கலாம்.


பட்சி தெரிந்தவனை பகைக்காதே! என்பது போல் சோழிகளுடன் விளையாடு பவனையும் பகைத்தல் கூடாது.


புது கதையாக இருக்கிறதே? என்றும் எண்ணம் உங்களுக்கு வரத்தான் செய்யும்.


பிரசன்ன ஜோதிட முறையை தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.


பொதுவாக ஒருவருக்கு செய்வினை வைக்ககூடிய சூழ்நிவை வரும்பொழுது பிரசன்னத்தின் மூலம் அந்த நபரின் ஜாதகத்தை கணித்து "மாந்தி" அமர்ந்த இடத்தை ஆராய்ந்து ( ஜாதகருக்கு பாதகமான இடத்தில் மாந்தி அமரும் பொழுது) செய்வினைக்கான உருவமைப்பை உயிரோட்டம் பெற செய்யும் தருணம் அந்த வினையிள் காரணமாக சம்பந்தபட்ட நபர் கடும் பதிப்புக்களுக்கு  உள்ளாவார். 


மாந்தரீகம் மற்றும் செய்வினை காரியங்களில் மாந்திக்கு மிக முக்கிய பங்குண்டு.

ஆகையால் கேரளத்தவர் மாந்திக்கு இன்றளவும் முக்கியத்துவம் தருகிறார்கள்.


ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பின்தொடர....


meenaksheJothidalayam2010.blogspot.com

meenakshe-Jothidalayam.business.site

meenakshe Jothidalayam /YouTube

meenakshe Jothidalayam /Google 


நம்முடைய கதாநாயகன் குளிகனை பற்றி பார்க்கலாம்.


மாந்திக்கு நேர் எதிர் குணம் கொண்டவர் குளிகன்.


குளிகை நேரத்தில் நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் உங்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். முக்கியமாக பூர்வீக சொத்து பிரச்சனைக்கான தீர்வு உங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றால் குளிகை நேரத்தில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக எதிர் பாலரிடம் பேச! ஆரம்பிப்பது நல்லது.


முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டிருக்கும் கடனில்! 

ஒரு பகுதியை செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் ஊரியவரிடம் பணமாக செலுத்த அந்த குறிப்பிட்ட நபர் சார்ந்த உங்கள் கடன் மிக விரைவில் அடைந்து விடும்.


மிக முக்கியமாக திருமணம் சார்ந்த விசயங்களை வியாழக்கிழமை குளிகை நேரத்தில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள். உங்கள் இல்லத்தில் விரைவில் திருமண வைபவம் நடந்தேறும்.

குளிகை நேரத்தில் யாரிடமும் சண்டை இடாதீர்கள். பிரச்சனை முற்றிவிடும்.


குளிகை நேரத்தில் தங்க ஆபரணங்களில் முதலீடு செய்தீர்கள் என்றால் நிச்சயம் அந்த முதலீடால் நட்டம் என்பது உங்களுக்கு ஏற்படாது.



எல்லாம் சரிதான்! செய்வினை என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டீர்கள். 

நம் கதாநாயகன் குளிகன் இந்த பிரச்சனையிலிருந்து

மீண்டு வர உதவி செய்வாரா??

நிச்சயமாக!


வெள்ளிக்கிழமை குளிகை நேரத்தில் காளி தேவியை வழிபட்டு எழுமிச்சை பழத்தை சூலத்தில் குத்தி வழிபட்டு வர ( 12 வாரங்கள்அல்லது எப்பொழுது வழிபட ஆரம்பிக்கின்றீர்களோ அதிலிருந்து நவராத்திரி திருவிழா முடியும் வரை செய்துவர) செய்வினை கோளாறு உங்களை விட்டு அகலும். 


ஜாதக ஆலோசனை பெற என்னை தேடி வரும் மக்களுக்கு பணம் செலவில்லாமல்  நான் சொன்ன பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

முயற்சித்து பாருங்கள்.


என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் 'தனுசு' பா.பிரபாகரன்.


Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............