நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.

 நவகிரகங்களில் இராகு பகுதி :- 3. 

 

இராகு உடைய தன்மைகளை பற்றி பார்க்கலாம். 


இராகு ஒரு பெண் கிரகம். நிறம் கருப்பு. அதிதேவதை காளி, துர்க்கை. பிரதி அதிதேவதை நாக தேவதை. 

திசைகளில் தென்மேற்கை குறிக்கக்கூடியது. 


விருச்சிக ராசியை உச்ச வீடாகும், ரிஷப ராசியை நீச்ச வீடாகும், மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளை பகை வீடுகளாகவும் ராகு பெற்றுள்ளார். 


இவருக்கு உகந்த தானியம் உளுந்து. மலர் மந்தாரை. நவரத்தினம் கோமேதகம். அந்நியபாஷைக்கு சொந்தக்காரர். 

இரவு, பகல் எந்த நேரமும் வலிமை உடையவர். இவருக்கு பிடித்தமான சுவை புளிப்பு. (புளியோதரை) 


விஷத்தால் பாதிப்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய் ஆகிவற்றை தருவதில் வல்லவர். பேய், பிசாசு போன்ற நம் கண்ணுக்குத் தெரியாத அரூபமான விஷயங்களை நம் அருகில் இருப்பது போல் உணர்த்தி நமக்கு மன பயத்தை தருவதில் இவரை மிஞ்ச கிரகம் இல்லை. 


ஹோரை மற்றும் அஷ்டவர்க்க பரல்கள் இவருக்கு கிடையாது. 


ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் உண்டா? இல்லையா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தில் ராகு உடைய நிலையை வைத்து ஆராயலாம். 


ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட.....


ஜோதிட ஆலோசனை /Facebook / page

meenaksheJothidalayam 2010.blogspot.com

meenakshe-Jothidalayam.business.site

meenakshe Jothidalayam /YouTube 


இராகுவுடன் சேர்ந்த சூரியன், இராகு பார்வையில் அமர்ந்த சூரியன் ஜாதகருக்கு பித்ரு தோஷத்தால் கடும்பாதிப்புக்களை ஏற்படுத்திவிடுவார். 


அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் ஜாதகரை விட்டு சற்று விலகியே நிற்கும்.


உழைப்பிருந்தும், உயர்வில்லை என்ற எண்ணம் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும்.


சூரியன் அமர்ந்த ராசிக்கு  9ம் ராசியில் இராகு அமர ஜாதகருக்கு தேட்டு வழி சிக்கல் உண்டாகும். 

அதாவது வருமானம் என்பது சீராக இருக்காது.


இராகு பார்வையில் அமர்ந்த சந்திரன் ஜாதகருக்கு குழப்பமான மனநிலையை ஏற்படுத்துவார். 

சரியான நேரத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் ஜாதகர் நல்ல வாய்ப்பினை தவற விட்டு பின்பு வருத்தப்படுவார்.


 மேலும் ஜாதகருடைய தாயாருக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படும். 


இதற்கான பரிகாரம் பற்றி பின் வரும் பாடங்களில் விரிவாக பார்க்கலாம். 


அதேபோல் சுபகிரக மற்றும் நட்பு கிரக பார்வையில் அமர்ந்த இராகு சமூகத்தில் ஜாதகருக்கு செல்வாக்கையும் அந்தஸ்தையும் பெற்றுத் தருவதில் வல்லவர். 


லக்னத்திலிருந்து 3, 6, 11-ஆம் இடங்களில் இராகு அமர்ந்து அதற்கு கேந்திர ஸ்தானத்தில் அதாவது ராகு அமர்ந்த வீட்டிலிருந்து 1,4, 7, 10ஆம் இடங்களில் குரு அமர்ந்து ராகு தசை நடப்பில் வந்தால், 

அல்லது  சுபகிரக பார்வையில் இராகு அமர்ந்து அவருடைய தசை நடப்பில் வந்து இராகு தனது புக்தி முடிந்து குருபுக்தி ஆரம்பிக்கும் காலங்களில்  நிச்சயம் அந்த ஜாதகரை இராகு சமூகத்தில் உயர்ந்த செல்வாக்குடன் வாழ வைப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 


ராசிக்கு 12ம் இடத்தில்  இராகு உச்சமாகி  புதன் சாரத்தில் அமர்ந்து ராசியாதிபதியின் பார்வையில் அமைய, மகாசக்தி யோகம் உருவாகி,  ஜாதகருக்கு  காளிதேவியின் அனுகிரகம் உண்டாகும். 

மாந்தரீக எண்ணங்கள் ஜாதகருக்கு அவரை அறியாமலே  வந்தடையும்.


இத்துடன் ராகுவைப் பற்றிய பாடம் முடிவடைந்தது.


 அடுத்து குரு என்று அழைக்கக்கூடிய வியாழபகவான் பற்றி வரும் பாடங்களில் பார்க்கலாம். 


Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............