நவரத்தினங்களில் வைரம் பகுதி : 1
நவரத்தினங்களில் வைரம் பகுதி : 1
நவரத்தின கற்களின் மகத்துவம் பற்றி பாமர மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்! என்ற அடிப்படையிலும், நவரத்தின கற்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்!! என்ற எண்ணத்திலும் நவரத்தினங்கள் பற்றிய இந்த கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றேன்.
12 ராசிகளில் பிறந்தவர்கள் அணியக்கூடிய நவரத்தின கற்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.
முதலில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட வைரக்கற்களை பற்றி பார்க்கலாம்.
அதற்கு முன்பாக நவரத்தினங்கள் பூமியில் எவ்வாறு உருவாகிறது? என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
ரத்தினங்களை பற்றி நாம் பார்க்கும் முன்பு நாம் வசிக்கும் பூமி பந்தை பற்றி சற்றே பார்க்கலாம்.
நமது பூமி பந்து போன்றஉருண்டை வடிவமானது.
இதன் விட்டம்(Diameter) சுமார் 13,000 கிலோ மீட்டர்கள்.
புரியும்படி சொன்னால் நீங்கள் இப்போது நிற்கும் இடத்திலிருந்து பூமியில் துளையிட்டு கொண்டே சென்றால்! 13,000 கிலோ மீட்டர் துளையிட்டபின்னர் பூமியின் நேர் பகுதியை அடையமுடியும்.
இந்த பகுதியை மூன்றாக பிரித்தால் நடுபகுதி(Core of earth) இதை கருப்பகுதி என்று அழைப்பார்கள்.
இதற்க்கு மேல் உள்ள பகுதி மான்டில்(Mantle) என்று அழைப்பார்கள்.
இதற்க்கும் மேல் உள்ள பகுதி பூமியின் மேற்பரப்பு (Creast) என்று அழைப்பார்கள்.
இந்த பகுதி சற்றே மிருதுவான பாறைகளால் ஆனது.
மார்பிள் மற்றும் கிரானைட் பாறைகள் உள்ள பகுதி ஆகும்.
இதில் ரத்தினங்கள் உருவாகும் பகுதி பூமியின் மையபகுதி.
( Core of earth).
உலோகம் மற்றும் கனிமங்களின் அழுத்தம் அதிகம் ஆகும் பொழுது மையபகுதியிலிருந்து மேலெழும்பி மான்டில் ( Mantle ) பகுதியிலுள்ள பாறைகளின் இடுக்குகள் வழியாக வருகின்றன.
மேலே வர,வர வெப்பம் குறைந்து ஆவி நிலையிலுள்ள கனிமங்கள் திரவ நிலை அடைகின்றன.
நிராவியும் குளிர்ந்து நீராகி கனிமங்கள் அதில் கரைந்து படிகங்களாக உருவாகின்றன.
மான்டில் பகுதியில் ஏற்படும் வெப்பத்தாலும்,
அழுத்தத்தாலும் படிகங்கள் இறுகி ரத்தினங்களாக மாறுகின்றன.
கனிமங்களின் வகைகளை பொருத்து ரத்தினங்களின் நிறமும்,தன்மையும் மாறுபடும் தன்மை உடையது.
இரத்தினங்கள் உருவாவதற்கான காலம் என்பது ஏதோ ஒரிரு வருடங்களில் நடந்து முடியும் செயல் அல்ல.
வைரங்கள் உருவாக பல மில்லியன் வருடங்கள் தேவை.
வைரத்தை பற்றி சற்றே விரிவாக நாம் பார்க்கலாம்.
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட......
meenaksheJothidalayam 2010.blogspot.com
meenakshe-Jothidalayam.business.site
meenakshe Jothidalayam /YouTube
ஜோதிட ஆலோசனை / மீனாக்ஷி ஜோதிடாலயம்/ Facebook
மிக விலைஉயர்ந்த கற்களில் ஒன்றாக கருதபடுவது வைரம்.
கரி துண்டின் மற்றொரு வடிவம் தான் வைரம்.
நம்புவது சற்றே கடினமாகதான் இருக்கும்.
ஆனால் அதுவே உண்மை.
கரிதுண்டும், வைரமும் அடிப்படையில் கார்பன் மாலிக்யூல்களால் (Molicuels) ஆனவை.
மாலிக்யூல்கள் என்பது வேதி பொருட்களின் கலவை.
கரியிலும்,
நிலக்கரியிலும்
வைரத்திலும் இருக்கும் முக்கியமான மூலப்பொருள் ஒன்று தான்.
அதாவது கார்பன்.
இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.
பதிவின் நீளம் கருதி
இத்துடன் இன்று பாடத்தை முடித்துக் கொள்கிறேன்.
நாளை வைரத்தை யார் பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உங்கள் ராசிக்கேற்ற அதிர்ஷ்டகற்கள் அதாவது நவரத்தினகற்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடரிடம் ஆலோசனை பெற 9500922576 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment