மீனாட்சிக்கும், காளிக்கும் என்ன தொடர்பு?
மீனாட்சிக்கும்,
காளிக்கும் என்ன தொடர்பு?இன்றுஅன்னை மீனாட்சியின் திருக்கல்யாணம். தூங்கா விழிகளை உடைய மீனாட்சியின் கடைகண் பார்வையால் பக்தர்கள் சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ மீனாட்சி ஜோதிடாலயம்j அன்னை மீனாட்சியையும், மீனாட்சி சுந்தரேஸ்வரரையும் மனமாற பிறார்த்திக்கின்றது.
மதுரை மீனாட்சிக்கு இன்னொரு பெயர் உண்டு.
தட்சணுக்கு மகளாக பிறந்ததால் தாட்சாயிணி என்ற பெயரும் உண்டு.தட்சணுக்கு மொத்தம் 52 பெண் குழந்தைகள்.இதில் முதல் குழந்தை தான் இந்த தாட்சாயிணி. இவள் ஒரு உண்ணதமான பிறவி.ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் மீனாட்சிக்கு மூன்று மார்பகங்கள் உண்டு இந்த மூன்றாவது மார்பகம் அவருடைய வீரத்தைக் குறிக்கும். வீரத்துக்கு மறு பெயர் மீனாட்சி. அந்த மீனாட்சி படையெடுத்து பல கண்டங்களை ( இந்த பகுதியில் கண்டங்கள் என்று குறிப்பிடுவது குமரி கண்டமே ஆகும்) வெற்றி கொண்டு கடைசியில் யாரிடம் போர் புரிவது என்று சிந்திக்கும்போது இவளுக்கு மனதில் தோன்றியது சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாயம்.
கைலாயத்தை போர் தொடுப்பது என்று இவள் முடிவெடுக்கும் பொழுது இவளுடைய தந்தை, தாயார் தன்னுடைய தோழிகள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்கும் படி இவளுக்கு அறிவுரை கூறினர் . ஆனால் போர் என்று வந்த பின்பு, யாராக இருந்தாலும் வெற்றி நமதே!! என்ற குறிக்கோளுடன் போர் தொடுத்தவள் மீனாட்சி. போர் தொடுத்த பின்பு தன்னுடைய காதல் கணவனை பார்த்த அந்த கணத்தில் இவளுடைய மூன்றாவது மார்பகம் மறைந்துபோனது. என்ன காரணம் என்று ஆராய்ந்த பொழுது வீரத்தை வென்ற அவளுடைய காதல் தான் முன்னின்றது.
காதல் கணவனை பார்த்தவுடன் நாணம் குடிகொண்டது. இன்றும் காதல் கல்யாணம் அப்படி என்ற ஒரு விஷயத்தை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் காதல், உண்மையான காதலுக்கு தலைகுனிந்து நின்றவள் மீனாட்சி.வீரத்தை காதலால் வென்றவள் மீனாட்சி.
ஆண்டாளுடைய காதலை பற்றி நமக்கு தெரியும். கண்டேன் காதலை என்றவள் ஆண்டாள். ஆனால் மனதில் இருப்பவனை அறியாமலே போர் தொடுத்தவள் மீனாட்சி.போர் தொடுத்த பின்பு தன்னுடைய காதலனை பார்த்து ..... நாணம் கொண்டவள் மீனாட்சி. மீனாட்சி காதல் மிகவும் வணங்கத்தக்க காதல்.இவளுடைய காதல் போற்றத்தக்கது. இவள் மாலையிட்டது சுந்தரேஸ்வரர் ஆகிய சிவபெருமானை.
மாமனுக்கும்,மருமகனுக்கும் அதிக பகை உருவாவதற்க்கு சந்திரனும் ஒரு வகையில் காரணம்.அது நம்முடைய கதைக்கு இப்பொழுது தேவையில்லாதது. மீதமுள்ள 51 குழந்தைகளில் 13 பெண்களை காசீப முனிவருக்கும்,10 பெண்களை தர்மதேவருக்கும் மணமுடித்து கொடுத்த தட்சண் மிதமுள்ள 27 பெண்களையும் சந்திரனுக்கே மணம் முடித்து கொடுத்தார்.கடைசி பெண்ணான ரோகினி மீதிருக்கும் ஆசையில் மறு பேச்சின்றி அத்தனை பெண்களையும் மணந்து கொண்டான் சந்திரன். இது தான் 27 நட்சத்திரகளாகி நம்மை வருத்தெடுத்து கொண்டிருக்கிறது. கிளை கதை போதும் என்று நினைக்கின்றேன். இந்த மகிழ்ச்சியில் தட்சண் மிக பெரிய யாகம் நடத்த அதில் சிவனுக்கும்,தாட்சாயிணிக்கும் அழைப்பில்லை. சகோதரிகள் தாட்சாயிணியை யாகத்துக்கு அழைக்க சிவனுடைய அனுமதியின்றி யாகத்திற்க்கு கிளம்புகிறாள் தாட்சாயிணி.அங்கு தந்தையிடம் அவமானபட்டு கைலாயம் திரும்புகிறாள்.
நம் நாட்டு பெண்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.பிறந்த வீட்டில் எவ்வளவு அவமானத்தை சந்தித்தாலும் கட்டிய கணவனிடம் வெளிகாட்டி கொள்வதில்லை. ஆனால் விடுவாரா சிவன் நோண்டி நொங்கு எடுத்து விட்டார்.பிறந்த வீட்டு அவமானத்தை விட இவர் பேச்சு மீனாட்சிக்கு கடும் கோபத்தை வரவழைத்து விட்டது.மீனாட்சியின் கோபத்தை பார்த்த சிவன் அவளை விட கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.சிவனாரின் இந்த கோபத்தின் வெளிபாடு தான் அகோர மூர்த்தி.
அன்னை மீனாட்சியின் கடுங்கோபத்தால் வெளிவந்த தெய்வமே அன்னை பத்ரகாளி.சிவனுடைய ஆணைபடி தட்சனுடைய யாகத்தை முழுவதுமாக அழித்தாள்.பின்பு சிவனுடைய கருணை பார்வையால் வனகாளியாகி பக்தர்களை இன்றும் காப்பாற்றி கொண்டிருக்கிறாள். மீனாட்சியின் மறுஉருவமே காளி. நண்பர் கேட்டது ஒரே கேள்வி.ஆனால் இந்த பதிவில் அதிகமான தகவல்களை கொடுத்திருக்கிறேன். நீங்கள் இதை படிப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment