மீனாட்சி ஜோதிடாலயம் மீனாட்சி பெயரை உபயேகப்படுத்தி கொண்டிருக்கும் ஜோதிடர் ஐயா இதுவரை மதுரை மீனாட்சியை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையா? அல்லது எழுத மனமில்லையா?.. என்று நண்பர் கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்த கேள்வி. ஆன்மீகம் கலந்த கேள்வி. மதுரை மீனாட்சியை பற்றி உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத தகவல்களை இந்த கட்டுரையில் பதிவு செய்கிறேன்.
மீனாட்சி ஜோதிடாலயம் மீனாட்சி பெயரை உபயேகப்படுத்தி கொண்டிருக்கும் ஜோதிடர் ஐயா இதுவரை மதுரை மீனாட்சியை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையா? அல்லது எழுத மனமில்லையா?.. என்று நண்பர் கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்த கேள்வி. ஆன்மீகம் கலந்த கேள்வி. மதுரை மீனாட்சியை பற்றி உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத தகவல்களை இந்த கட்டுரையில் பதிவு செய்கிறேன்.
ஆடி வெள்ளி அன்னை மீனாட்சியின் அனுகிரகத்தால் உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ அன்னை மீனாட்சியை மீனாட்சி ஜோதிடாலயம் மனமாற பிறார்த்திக்கின்றது.
மீனாட்சி என்ற பெயர் நமக்கு உணர்த்துவது என்ன?
மீன்+அக்ஷம் பிரித்து பார்ப்போம்.
அக் ஷம் என்றால் கண்கள்.
அதாவது மீனை போன்ற கண்களை உடையவள் என்று பொருள்.
காமாட்சி என்றால் காமனை பழித்த கண்களை உடையவள் என்று பொருள்.
மதுரை நகரத்திற்க்கு தூங்கா நகரம் என்று பெயரும் உண்டு. இதற்கான விளக்கத்தை பார்த்தால் அன்னை மீனாட்சி தன்னுடைய கடைகண் பார்வையால் தன் மண்ணில் வாழும் மக்களை எப்பொழுதும் பார்த்து கொண்டு இருக்கிறாள்.எனவே தான் மதுரையை தூங்கா நகரம் என்று பொருள்கொள்ளல் வேண்டும்.
மதுரை நகரத்திற்க்கு மற்றொரு சிறப்பு உண்டு.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் மதுரை.
முருகப்பெருமானின் நேரடி சிஷ்யரான நக்கீரர் வாழ்ந்த ஊர் மதுரை.
திருவாரூரில் பிறந்தால் முக்தி.
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி.
காசியில் இறந்தால் முக்தி.
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.
மதுரை என்ற பெயரை கேட்டாலே முக்தி.
ஏனென்றால் சிவபெருமான் 64 திருவிளையாடல்களை நடத்திய ஸ்தலம் மதுரை.
மீனாட்சியை பற்றி பேசும்பொழுது காளியை பற்றியும் பேசி ஆக வேண்டும். மீனாட்சிக்கும், காளிக்கும் என்ன தொடர்பு? நாளை பார்க்கலாம். என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment