சனிக்கிழமை தோறும் கருடாழ்வாரை தரிசிப்பதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

 சனிக்கிழமை தோறும் கருடாழ்வாரை தரிசிப்பதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம்.


சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் திருமண தடை விலக, சனிக்கிழமை தோறும் துளசி சாற்றி கருடாழ்வாரை  வழிபட தோஷம் நீங்கி, விரைவில் திருமண சுபகாரியங்கள் நடந்தேறும்.


குழந்தை பாக்கியம் கிட்ட, கருடாழ்வாருக்கு சனிக்கிழமை தோறும் காலை விரதமிருந்து, கருடாழ்வாரின் பாதத்தில் உள்ள  துளசியை வீட்டிற்க்கு எடுத்து சென்று கருடாழ்வாரை மனமுருகி வேண்டி துளசியை கசாயமாக அருந்த, மிக விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.


கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள், புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடாழ்வாருக்கு செந்தாமரை சாற்றி வழிபட்டு, லட்டு நெய்வேத்தியம் செய்து, அங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கெடுக்க கருடாழ்வரின் மனம் மகிழ்ச்சி அடைவதோடு மட்டுமில்லாமல், உங்கள் வருமானம் உயர்ந்து, கடன் அடைப்பதற்கான வாய்ப்பையும் உங்களுக்கு தந்தருள்வார்.


மனபயம், மனபதட்டம் உள்ளவர்கள், புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடாழ்வாருக்கு வெண்தாமரை சாற்றி வழிபட, மனபயம் நீங்கி,

தெளிவான மனநிலையை பெற்று, எந்த ஒரு காரியத்திலும் ஆழ்ந்த அறிவுடன் ஈடுபடக்கூடிய மனபக்குவத்தையும் பெறுவார்கள்.


கருடாழ்வாருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபட,  நவகிரக தோஷங்கள், பட்சி தோஷத்தால் ஏற்படும் சாபங்களால் ஆகிய தோஷங்களிலிருந்து விடுபட்டு, நிவர்த்தியும் பெறலாம். 


நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!

நல்லதே நடக்கும்!!


என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............